வைத்திய கலாநிதி சிவமோகன்
கொரோனா வைரஸ் தொடர்பாக அரசுடன் அண்மையில் சந்திப்பொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டிருந்தது அதனை சில அரசில் கட்சிகள் விமர்சனம் செய்திருந்தார்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிக்கையை வைத்திய கலாநிதி சிவமோன் வெளியிட்டுள்ளார்
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது
காலத்திற்கு காலம் தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக ஒலித்து தனது சேவையை செய்து வருகிறது இன்று தமிழ் மக்களுக்காக அனைத்து பிரச்சனைகளையும் திரைமறைவு நாடகங்களையும் வெளிக் கொண்டு வருவதற்காக நியாய பூர்வமாகசெயற்பாட்டில் உள்ள அரசாங்கத்ததுடன் கலந்துரையாட வேண்டிய கடமை தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினுடையதே
அந்த கடமையை சரியாக தமிழ்தேசிய கூட்டமைப்பினர் செய்து கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது அண்மையில் மஹிந்த ராஜபக்சவுடனான கொரேனா தொடர்பான அவர்களது சந்திப்பில் தங்களது அரசியல் அடிபட்டு விடுமோ என்ற பயத்தில் பிதற்றத் தொடங்கியிருக்கிறார்கள்
தங்களது சொந்தமான அரசியலை முன்னகர்த்த முடியாத தமிழ் மக்கள் விரோத வங்குரோத்து கட்சிகள் அனைத்தும் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை புறணி சொல்லத் தொடங்கியிருக்கின்றது
அவர்களின் கருத்துக்களில் இருந்தே தமிழ்மக்களின் ஏகோபித்த அமைப்பு மற்றும் பாதுகாப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் என்பது மக்களுக்கு தெளிவாகத் தெரிகிறது
இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை புறணி சொல்வதில் கை தேர்ந்நதவ்களாக இருப்பவர்கள் யார் என்று பார்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பதவியில் இருந்து மக்களுக்கான சேவையினை ஒழுங்காக செய்யாமல் மக்களால் துரத்தி அடிக்கப்பட்டவர்கள் புதிய கட்சிகளை ஆரம்பித்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக பிதற்றத் தொடங்கியிருக்கிறார்கள்
இவர்களது வரலாறுகளையும் வங்குரோத்து அரசியல் செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் ஆகவே இவ்வாறான போலி முகவர்களுக்கு தமிழ் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்று வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தி கலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்
