சுகாதார விதிமுறைகளைப் பேணாத 912 பேர் கைது..

ஐ. ஏ. காதிர் கான்-

னிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 912 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 26 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரையிலான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய, (29) அதிகாலை 4.00 மணி முதல், இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியினுள் 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முகக் கவசங்களை அணியாமை, சமூக இடைவெளியைப் பேணாமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம், குடிமக்கள் வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுப்பதற்காக, கடந்த மே 26 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல், தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -