எப்.முபாரக் -
கொவிட் 19 நிலை காரணமாக பொது நிர்வாக அமைச்சு சகல மாவட்டங்களிலும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நலன்புரி மற்றும் ஏனைய சேவைகளை ஒருங்கிணைப்புச்செய்யவும் இலகுபடுத்தும் நோக்கில் உதவியாக ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்துள்ளது.
அதன்படி திருகோணமலை மாவட்டத்திற்கு வீடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (15)அவர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவை மாவட்ட செயலகத்தில் சந்தித்ததுடன் அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் அத்தியவசிய சேவைகள் உட்பட பல விடயங்களை இதன்போது கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ்,மாவட்ட உதவ அரசாங்க அதிபர் என்.பிரதீபன் உட்பட அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
அதன்படி திருகோணமலை மாவட்டத்திற்கு வீடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (15)அவர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவை மாவட்ட செயலகத்தில் சந்தித்ததுடன் அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் அத்தியவசிய சேவைகள் உட்பட பல விடயங்களை இதன்போது கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ்,மாவட்ட உதவ அரசாங்க அதிபர் என்.பிரதீபன் உட்பட அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.