தலவாக்கலை நிருபர்-
வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கிறேட்வெஸ்டன் பாடசாலை சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது.
தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய 48 மாணவர்களில் 25 மாணவர்கள் கணித பாட சித்தியுடன் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
66.5 வீத சித்தி பதிவாகியுள்ளது. பாடசாலையின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த பாடசாலையின் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோருக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.பாரிஸ், பிரதி அதிபர் சண்முகம் விஜயசுந்தரம் ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
