கொரொனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக தொற்று நீக்கி மருந்து விசிறும் பணிகள் கல்முனையில் இன்று (17)
இடம்பெற்றது.
கல்முனை மாநகரசபை அனுசரணையுடன் கல்முனை பொதுப்பணி மன்றம் இணைந்து இவ் கிருமிநாசினிகள் தெளிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்கள் ஒன்றுகூடும் பொது இடங்கள், பிரதான வீதிகள்,மீனவர்களின் ஓய்வு அறைகள், மீன்பிடிவாடிகள் ,பள்ளிவாசல்கள் ,வீடுகள் போன்ற இடங்களில் தொற்றுநீக்கி விசிறப்பட்டது.
இதன் போது கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான
ஏ.சி.ஏ சத்தார், எம்.எஸ்.எம் நிசார் (ஜேபி), ஏ.எம் ரோஸன் அக்தர் (சட்டத்தரணி) மற்றும் பொதுப்பணி மன்றத்தின் தலைவர் தொழிலதிபர் அல்ஹாஜ் எஸ்.எல் அமீர்(நயீர்) உட்பட அமைப்பின் அங்கத்தவ்ர்களும் கலந்து கொண்டனர்.
கல்முனை பிராந்தியத்தில் பொது பணி மன்றமானது பல சமூக சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.