5000 கொடுப்பனவில் அரசியல் விளையாடுவதாக அருணலு மக்கள் முன்னணி குற்றச்சாட்டு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களினால் வழங்கப்படும் 5000 கொடுப்பனவு சில அரசியல் பிரமுகர்களால் வழங்கப்பட்டு வருவதாகவும் இது அரசியல் கட்சியின் ஆதரவாளர்களுக்கு மாத்திரம் பெற்றுக்கொடுப்பதாக அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் வைத்தியருமான கே.ஆர் கிசான் தெரிவித்தார்.
ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவிததார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நேற்றைய தினம் அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி அவர்கள் இந்த கொடுப்பனவு முச்சக்கர வண்டி சாரதிகள்,கட்டிடங்களில் வேலை செய்வோர்,வீதி வியாபாரிகள் தோட்டங்களிலும் கிராம புறங்களிலும் இருக்கும் வேலையற்றோர்.அனைவருக்கும் இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.இதில் தனியார் பஸ் சாரதிகள் நடத்துனர்கள் என பலரும் அடங்குகின்றனர்.
எனினும் நுவரெலியா மாவட்டத்தில் இது மிக மோசமான நிலையில் செய்யப்படுகின்றது.இது குறிப்பிட்ட சாரருக்கு மாத்திரம் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.ஆனால் இதில் வருமானம் உள்ளவர்களுக்கும் கிடைக்கின்றது. ஒரே குடும்பத்தில் நாலு ஐந்து பேருக்கு கிடைக்கின்றது.ஆனால் கிடைக்க வேண்டிய தகுதிகள் கொண்ட எத்தனையோ குடும்பங்களுக்கு இது கிடைப்பதில்;லை.உடனடியாக ஜனாதிக்கும் பரதேச செயலாளர்களுக்கும் இது தொடர்பாக தெரிவித்துள்ளோம்.ஜனாதிபதி கொரானாவுக்காகத்தான் இதனை கொடுத்துள்ளார்.இதனுடன் தொடர்புடைய அமைச்சுக்களும் அவ்வாறு தான் செய்துள்ளன. ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இது வித்தியாசமாக செயப்படுகிறது.
ஆகவே ஜனாதிபதி அவர்கள் இதற்கு ஒரு கமிட்டியினை அமைத்து இந்த நிதி கிடைக்க வேண்டிய ஏழை குடும்பங்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதே போல் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா தருவதாக பல முறை சொன்னார்கள் ஆனால் இன்று வரை அது கிடைக்கவில்லை. இம் மாதம் 10 திகதி தருவதாக சொன்hர்கள் அதுவும் கிடைக்கவில்லை.ஆகவே தான் நாங்கள் கூறினோம் தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று இதனை எமது கட்சி ஜெனிவா வரை கொண்டு சென்றுள்ளது.தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றால், அது மாத சம்பளத்தின் மூலம் முடியும் என்பதனை நாங்கள் அடிக்கடி கூறி வருகிறோம்.
அதே நேரம் அடுத்த மாதம் தேர்தல்களை நடத்த அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் தேர்தல் நடத்துவதற்கு பொருத்தமான சூழல் அல்ல இன்று மக்கள் மனநிலை தேர்தல் தொடர்பாக அல்ல உயிரை காத்துக்கொள்வது தொடர்பாகத்தான் காணப்படுகின்றது.அத்தோடு இன்று உள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்களை செய்யவும் முடியாது அதற்கு ஏற்ற சூழலுமில்லை.ஆகவே கொரானா தொற்று பூச்சியமாக மாறும் வரை தேர்தலை ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -