அஸ்ரப் ஏ சமத்-
கோரோனா வைரஸ் பரவுதலினால் நாடு முழுவதிலும் ஊரங்கு மற்றும் பிரதேசங்கள் முடக்கம் அமுலாக்கத்தினால் அன்றாம் உழைத்து வரும் குடும்பங்கள் வாழ்வதாரத்திற்கு கஸ்டங்களை எதிா் நேக்குகின்றனா்.
அந்த வகையில் தனியாா் நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு உதவி வருகின்றது.
அந்த வகையில் இலங்கையில் உள்ள கொரிய நிறுவனமும் இலங்கை கம்பனியான பொஸ்பரஸ் தனியாா் நிறுவனமும் முன்னாள் அமைச்சா் வாசுதேவ நானயக்காரவின் வேண்டுகோளின் பேரில் அவரது பிரதேசமான எகிலியகொடவையில் வாழ்வதாரத்தினை இழந்த குடும்பங்களுக்கென பகிா்ந்தளிக்க வென 200 உலா் உணவுப் பொதிகளை கையளித்தனா்.
இந் நிகழ்வில் கொரிய கம்பனியின் பணிப்பளா் கிம் பயிங் யம், மற்றும் எம் நஸாா் இணைந்து இதனைக் கையளித்தனா். ஒவ்வொரு பொதியும் ருபா 9 ஆயிரம் ருபா விலை மதிப்புக் கொண்டவைகள் இவ் உலா் உணவு 3 வாரத்திற்கு போதுமான பால் மா அரிசி சீனி பருப்பு தேயிலை போன்ற உணவுகள் அடங்கியுள்ளன.
. இந்தப் பாா்சல்களை முன்னாள் அமைச்சா் வாசுதேவ நாணயக்காரவின் எகியலகொடையில் வாழும் ஏழைகளுக்கு வழங்குவேன் என வாசுதேவ அங்கு கூறினாா்.