இராணுவத்தால் பராமறிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இதுவரை சுமார் 1311 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்த சுமார் 3459 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
- இதேவேளை புத்தளம், அல்காசிம் சிட்டி மற்றும் பாலாவி ஆகிய பகுதிகளில் இருந்நு சுமார் 65 பேர் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
- இவர்களை நேற்றிரவு தனிமைப்படுத்தில் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களில் அண்மையில் இந்தோனேசியாவிற்கு சென்று வந்து மன்னார் தராபுரம் பகுதியில் மரண வீடு ஒன்றுக்கும் சென்று அதனை மறைத்தவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -