பேர்மிங்ஹாம் விமான நிலையத்தை பிணவறையாக மாற்றும் UK!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
ரோப்பிய நாடுகளில் ஒன்றான UKயில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதாக UK அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ், மற்ற நாடுகளில் பெரும் துயரத்தை அளித்து வருகிறது. இத்தாலி, ஈரான், ஸ்பெயின், அமெரிக்காவை தொடர்ந்து, UKயையும் கொரோனா அதிர வைக்கிறது. UKயில் பிரித்தானியா இளவரசர் சார்ள்ஸ், UK பிரதமர் போரிஸ் ஜோன்சன், UKயின் சுகாதார அமைச்சர் உள்பட யாரையும் விட்டுவைக்காமல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமான சூழலை அடைந்துள்ளதால், அங்குள்ள பேர்மிங்ஹாம் (Birmingham) விமான நிலையத்தை, 12 ஆயிரம் உடல்களை வைக்கும் தற்காலிக பிணவறையாகப் (Mortuary) பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஒரு களஞ்சியசாலை மற்றும் இரு முனையங்களை கொண்ட இந்த விமான நிலையத்தில், 1ம் கட்டமாக 1,500 உடல்களை வைக்கும் அளவிற்கான பிணவறையாக மாற்றப்படவுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டோர் மட்டுமில்லாமல் , வேறு எந்த நோயால் இறப்பவரையும் வைப்பதற்கான தற்காலிகமான பிணவறை உருவாக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸின் பாதிப்பினால் அங்கு இதுவரை 759 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த புதன்கிழமை 475 ஆக இருந்த இந்த எண்ணிக்கை திடீரென உயர்ந்திருக்கிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -