கொரோனா வைரஸ் எதிரொலி-நிர்க்கதியான குடும்பங்களுக்கு விசேட அதிரடிப்படை நிவாரணம் வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான்-
கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த வறுமைக்கோட்டில் உள்ள குடும்பங்களுக்கு சமைப்பதற்கான பொருட்களை விசேட அதிரடிப்படையினர் வழங்கி வைத்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் உள்ள விசேட அதிரடிப்படையினரின் ஏற்பாட்டில் சுமார் 75க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு செவ்வாய்க்கிழமை(31) முற்பகல் இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கல்முனை பிராந்திய விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.எச்.ஏ மதுரங்கவின் தலைமையில் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்ட தாய் தந்தையை இழந்தவர்கள் வயோதிபர்கள் விதவைகள் ஆகியோருக்கு இப்பொருட்கள் வழங்கப்பட்டது.
இப்பொருட்தொகுதியில் தேங்காய், சோயா, கடலை, பருப்பு ,நெருப்புப்பெட்டி , உப்பு, சீனி, கோதுமை மா ,அரிசி ,உள்ளிட்ட அத்தியவசியப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.













எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -