பாரதி மன்னிக்கட்டும்.

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்-

வீட்டில் விளையாடு பாப்பா.
வெளியே போகாதே பாப்பா.
கூடி விளையாடாதே பாப்பா
கொரோனா வந்துவிடும் பாப்பா.

காலை எழுந்து கொஞ்சம் படிப்பு
கதைப் புத்தகங்களோடு பிடிப்பு
மாலை சகோதரரோடு விளையாட்டு
மனதை பழக்கப்படுத்திவிடு பாப்பா .

கை கால் முகம் கழுவு பாப்பா.
கண்ட பொருள் தொடாதே பாப்பா.
மெய் நனையக் குளிக்கணும் பாப்பா
நடைமுறையே உயிருக்கு தாழ்ப்பாள்.

சுற்றித் திரிதல் வேண்டாம் பாப்பா.
சூழவும் கிருமியுண்டு பாப்பா .
தொற்றிக் கொண்டு விட்டால் பாப்பா.
தூரவே தள்ளி வைப்பார் பாப்பா .

தும்மல் , இருமல் கண்டவிடத்து
தூரநின்று பேசவேண்டும் பாப்பா.
எம்மில் சிலருக்கும் கொரோனா
இருந்து விட நியாயமுண்டு பாப்பா.

இறைவன் நமக்குத் துணை பாப்பா.
இருகை ஏந்திக்கேளு பாப்பா .
குறைகள் நோயுமற்ற வாழ்வை
நிறைவாய் தரச்சொல்லியே கேட்பாய்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -