நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாலாள் சந்திப்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படுமாயின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி தனிமைப்படுத்தல் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எனினும் விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதியை வழங்க வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்படி மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
மேலும் 7 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.