ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விண்ணப்படிவங்களை பெறுவதற்காக முண்டியடிக்கும் மக்கள்

ஐ.எல்.எம் நாஸிம்-

ரு இலட்சம் வேலைவாய்ப்பு விண்ணப்படிவங்களை பெற சென்றவர்கள் நாவிதன் வெளி பிரதேச செயலகத்தில் மக்கள் நிறைந்தமையால் அமைதியின்மை ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை(24) காலை முதல் குறித்த வேலைவாய்பு தொடர்பான விண்ணப்பபடிவங்கள் வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் பெறுவதற்காக வருகை தந்திருந்தனர்.
இதன் போது பிரதேச செயலகத்தில் அதிகளவான மக்களின் வருகையால் சிறிது அமைதியின்மை ஏற்பட்டதுடன் பின்னர் பொலிஸார் இராணுவத்தினர் வருகை தந்து சுமுக நிலையை அடைந்தது.

இந்த வேலைவாய்பிற்கான விண்னப்பபடிவங்களை சீராக வழங்குவதற்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எ.எஸ் ரங்கநாதன் தலைமையில் செயலக உத்தியோகர்தர்கள் சிறந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இன்று மாத்திரம் சுமார் 1500க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் குறித்த விண்ணப்பபடிவங்களை நாவித்ன்வெளி அனைமலை சவளக்கடை செறிக்கல்முனை சாளம்பைகோணி மத்தியமுகாம் உள்ளிட்ட கிராம சேவக பிரிவில் உள்ள வேலையற்ற விண்ணப்பதாரிகள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -