வடமேல் மாகாண சபைக்குட்பட்ட நிறுவனங்களுக்குக்கிடையில் நடைபெற்ற செயல்திறன் போட்டியின் பரிசளிப்பு மற்றும் விருது விழா

டமேல் மாகாண சபைக்குட்பட்ட நிறுவனங்களுக்குக்கிடையில் நடைபெற்ற செயல்திறன் போட்டியின் பரிசளிப்பு மற்றும் விருது விழா இன்று வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது, வடமேல் மாகாணத்தின் சிறந்த மாநகர சபையாக குருநாகல் மாநகர சபையும், வடமேல் மாகாணத்தின் சிறந்த நகரசபையாக குளியாபிட்டிய நகர சபையும், வடமேல் மாகாணத்தின் சிறந்த பிரதேச சபையாக வாரியப்பொல பிரதேச சபையும் விருதுகளைப் பெற்றுக்கொண்டது.

வடமேல் மாகாண சபை தலைவர் டிக்கிரி அதிகாரி, வடமேல் மாகாண செயலாளர் P.B.M. சிறிசேன, குருநாகல் மாவட்டச் செயலாளர் காமினி இளங்கரத்ன, அமைச்சக செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையர் இந்திகா இளங்ககோன், வடமேல் மாகாணசபையின் பிரதானிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -