மதவாக்குளத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மினுவாங்கொடை நிருபர்-
றுமைக்கோட்டின் கீழ் வாழும் 100 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர் அன்ஸார் ஆசிரியர் தலைமையில், அண்மையில் மதவாக்குளம் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
பீ.சீ.எம்.எச். (BCMH) கல்வி நிறுவனத் தலைவரும் அ.இ.ம.கா. புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான அலி சப்ரி ரஹீம், இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தனது சொந்த நிதி ஒதுக்கீட்டில், குறித்த மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
நிகழ்வில் கெளரவ அதிதிகளாக, அ.இ.ம.கா. பணிப்பாளர் றிஸ்வான், செயலாளர் ஜெளஸி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்லியாஸ், மதவாக்குளம் வித்தியாலய அதிபர் பஷீர், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் பாரூக் மற்றும் கல்வி நிறுவன ஊடக இணைப்பாளர் சில்மியா யூசுப் உள்ளிட்ட அ.இ.ம.கா. ஊடக இணைப்பாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -