கண் நோய் கூடுதலாகப் பரவுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்


மினுவாங்கொடை நிருபர்-
நாடு முழுவதும் கண் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கண்நோய் பரவுவதைத் தடுப்பதற்கு, சுகாதாரப் பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு, தேசிய கண் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மொனிகா விஜேரத்ன வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
கண்ணீர் வருதல், கண்கள் சிவத்தல், கண்களில் வலி ஏற்படுதல் ஆகிய அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கை வைத்தியம் செய்வதைத் தவிர்க்குமாறும், கைக்குட்டைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் நோயாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -