திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரங்கல் பிரதேசத்தில் சாந்தி நகரில் இன்று (04) 3680 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவரை தாம் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத் தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கைதான நபர் போதை பொருள் விற்பனையாளர் எனவும் விற்பறைக்காக ஹெரோயினை பொதி இட முற்பட்ட வேளையில் தாம் குறித்த போதைப் பொருள் விற்பனையாளரை கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர் 49 வயதுடையவர் எனவும் கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதை பொருளையும் சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தும் நோக்கில் கிண்ணியா பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.