கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரங்கல் பிரதேசத்தில் சாந்தி நகரில் 3680 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது.


எப்.முபாரக்-
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரங்கல் பிரதேசத்தில் சாந்தி நகரில் இன்று (04) 3680 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவரை தாம் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத் தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைதான நபர் போதை பொருள் விற்பனையாளர் எனவும் விற்பறைக்காக ஹெரோயினை பொதி இட முற்பட்ட வேளையில் தாம் குறித்த போதைப் பொருள் விற்பனையாளரை கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர் 49 வயதுடையவர் எனவும் கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதை பொருளையும் சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தும் நோக்கில் கிண்ணியா பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -