எம்.பஹ்த் ஜுனைட்-
ஊடகவியலாளர்கள் தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல் மற்றும் முடிவுகளை வெளியிடுதல் தொடர்பான செயலமர்வு செவ்வாய்க்கிழமை (12) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிறைட் மீடியா நெட்வேர்க் நிறுவனத்தின் அனுசரணையில் சிலோன் மீடியா போரம் மற்றும் சென்றல் ரீவி இணைந்து ஏற்பாடு செய்திருந்த
இச்செயலமர்வுக்கு ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்.முஹம்மட் வளவாளராக கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல், முடிவுகளை வெளியிடுதல் மற்றும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பில் தேர்தல் தொடர்பான சரத்துக்கள், தேர்தல் காலங்களில் ஊடக ஒழுக்க நெறி தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் ரியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் பிரதம விருந்தினராக தென் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி ரமீஸ் அபூபக்கர் மற்றும் பிறைட் மீடியா நெற்வேர்க் நிறுவனத்தின் பணிப்பாளர் யூ.கே ஜெசீல்,
சிலோன் மீடியா போரத்தின் பிரதிதலைவர் ,எஸ்.அஷ்ரப்கான்,
செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், உட்பட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன் ஏராளமான ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றதுடன் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.