அரசியலில் எதுவும் நடக்கலாம் அல்லது அரசியலில் நீண்ட கால பகைவனும் கிடையாது, நீண்ட கால நண்பனும் கிடையாது என்ற வாஸ்த்தவமான கருத்து இருக்கின்றது. அந்த வகையில் முன்னால் ஆளுனர் ஹிஸ்புல்லாவின் அரசியலை 1987ல் இருந்து பார்ப்போமானால் மேற்கூறிய யதார்த்த ரீதியான கருத்து அவருக்கே சாலப்பொருத்தம் எனலாம். அதன் அடிப்படையில் இறுதி நேரத்தில் வேட்பாளர் சஜித்தினை ஜனாதிபதியாக தீர்மானிக்கும் மிகவும் சாதுரியமான முடிவினை ஹிஸ்புல்லாவினால் எடுக்கபடலாம் என்பதும் எதிர்வு கூறப்பட வேண்டிய ஒன்றாக இலங்கை அரசியலில் பார்க்கப்படுகின்றது.
சமகால அரசியலில் ஜனாதிபதியினை தீர்மானிக்கும் ஜனதிபதி வேட்பாளர் என ஹிஸ்புல்லா ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி இருப்பது வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவை வெற்றியடைய செய்வதற்காகவும், அவரினால் கட்டப்படுகின்ற பல்கலை கழகத்தினை காப்பாற்றுவதற்காவுமே என பலவாறு ஹிஸ்புல்லா விமர்சிக்கப்பட்டலும் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் வாதிகளில் ஹிஸ்புல்லா முக்கியமான அரசியல் அனுபவமிக்க, ஆளுமையுள்ள, தேசிய அரசியலில் முஸ்லிம்கள் தரப்பில் இருக்கும் அரசியல்வாதிகளில் தனியாக நின்று பேரம் பேசக்கூடிய திறமைகளை கொண்ட ஒருவர் என்பதனை மறுக்க முடியாது என்பதற்கு அப்பால் அதற்கான பல வரலாறுகளும், சான்றுகளும் அதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.
முஸ்லிம்களின் வாக்குகளை தான் பரவலாக பெற்றுக்கொள்ளும் நிலையில் இந்த நாட்டில் ஜனாதிபதியினை தீர்மானிக்கின்ற ஒரு சமூகத்தினை சார்ந்த சக்தியாக நான் இருப்பேன் என ஹிஸ்புல்லா கூறிவருகின்றார். அந்த வகையில் அவர் இன்னும் தான் எவரை ஆதரிக்க போகின்ற ஜனதிபதி வேட்பாளர் என்பதனை அறிவிக்கா விட்டாலும் பல மஹிந்தவிற்கு கோட்டாவிற்கும் கடைக்கு போகும் வேலையை செய்கின்றார் என பலதரப்பட்ட விமர்சனங்களுக்கும், எதிர்த்தரப்பினருடைய கடுமையான தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் ஹிஸ்புல்லா தனக்கு கிடைக்க இருக்கும் வாக்கு வங்கியினை தேசிய அளவில் எவ்வாறு பெருக்கிக்கொள்வது என்பதில் மிகவும் தீவிரமாகவே செயற்படுவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
ஹிஸ்புல்லாவின் அரசியலை எடுத்துக்கொண்டால் அரசியல் அதிகாரத்தினை எவ்வாறு பெற்று அதன் மூலம் எவ்வாறான அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் என்பதில் சாதுரியமன காய் நாகர்த்தல்களை மிகவும் பக்குவமாகவும், அமைதியாகவும் கையாண்டுள்ள சம்பவங்களே அவர் கடந்து அவந்த அரசியல் பாதைகள் நெடுகிலும் பலதரப்பு விமர்சனங்களுக்கு மத்தியில் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் எவ்வாறாக இருந்தாலும் ஹிஸ்புல்லாவினை கிழக்கு முஸ்லிம் சமூகம் கட்டுமல்லாது தேசிய ரீதியாகவும் முஸ்லிம்கள் அடைந்துள்ள பல அதிகம் என்பது மறுத்துரைக்க முடியாத உண்களில் ஒன்றாகவே இருக்கின்றது.
தேசிய அளவில் ஹிஸ்புல்லாவின் அரசியலில் இரண்டு நபர்கள் முக்கியமான பாதிரங்களை வக்கின்றனர். ஒருவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றையவர் அமைச்சர் மங்கள சமரவீர. இவர்களுடைய முடிவுகளும் தீர்மானங்களும் ஹிஸ்புல்லாவின் அரசியலின் வளர்சியிலும் பல வகையான காய் நகர்த்தல்களிலும் வித்தியாசமான நன்மைகளை கொண்ட அடைவுகளை அவருக்கு கொடுத்திருக்கின்றது என்பது இலங்கை அரசியல் வரலாற்றில் காத்தான்குடி அரசியல் சம்பந்தமாக எழுதப்பட்ட ஓர் ஏடாகவே பார்க்கப்படுவதோடு அரசியல் அவதானிகளின் கருத்துக்களும் அதுவே.
தேர்தல் கள நிலவரங்கள் எவருக்கு சாதகமாக இருக்கின்றது என்ற கேள்விக்கும் அதற்கான விடைகளுக்கும் அப்பால் சிறீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய கர்த்தாகவாக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க வேட்பாளர் சஜித்துக்கு ஆதரவளிக்கும் முடிவினை எடுக்க போகின்றர் என்ற பரவலான செய்திகளுக்கு மத்தியில் இறுத்திக்கட்ட மங்கல சமரவீரவின் சாதுரியமான அரசியல் காய் நகர்த்தலின் ஓர் அங்கமாக எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுமிடத்து அவரை தீர்மானிக்க ஜனதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏம்.எம்.ஹிஸ்புல்லா மாறுவார் என்பது எனது ஊகிப்பில் ஒன்றாக உள்ளது.