நல்லாட்சியில் அமைச்சராக இருந்தவர்களுக்கு இப்போது நல்லாட்சியில் குறைகள் தெரிகிறது




ஈரு இலையும் ஓர்துளிரும் கொண்ட கொழுந்துக்கிடையே மொட்டு பூப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. -என்கிறார் திலகர் எம. பி. 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
ரு இலையும் ஓர்துளிரும் கொண்ட கொழுந்துக்கிடையே மொட்டு பூப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்
17.10.2019.வியாழக்கிழமை அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்
இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில் சில அரசியல்வாதிகளுக்கு இப்போதுதான் நல்லாட்சியின் குறைகள் தெரிகிறது,நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து அமைச்சி பதவிகளை அனுபவித்து கொண்டு அதன் சுகபோகங்களை பெற்று கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அவர்களோடு ஒட்டி கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்றவர்களுக்கு இப்போது தான் நல்லாட்சியுடைய குறைகள் தெரிகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தின் போது நீங்களும் முத்துசிவலிங்கம் ஆகிய இருவரும் பாராளுமன்றத்திலே அமர்ந்து கொண்டு ஏன் மெளனிகளாக இருந்தீர்கள் உங்களுக்கு முதுகெழும்பு இருந்திருந்தால் தைரியம் இருந்திருந்தால் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன் வைக்கபட்ட வரவு செலவு திட்டத்திற்கு எதிராக கை உயர்த்தி இருந்திருக்க வேண்டும்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவர் முத்துசிவலிங்கம் ஆரம்பகைத்தொழில் பிரதி அமைச்சராக எங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் அமர்ந்து இருந்தார்
மத்திய மாகாணத்தில் ராமேஸ்வரன் மாகாண அமைச்சராகவும் ஊவா மாகாணத்தில் செந்தில் தொண்டமான் ஊவாமாகாண அமைச்சராக இருந்தது எங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கு தற்பொழுது நல்லாட்சி அரசாங்கம் கசக்கிறது.
கோத்தாபய ராஜபக்ஸ அவர்களை கொண்டு வந்து அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதாக கூறுகிறார்கள் நாங்கள் வரலாற்றை மறந்தவர்கள் அல்ல மீறியபெத்தையில் மண்சரிவு ஏற்பட்ட போது மக்கள் அகதிகளாக இருந்த போது மக்கள் மாண்டு இருந்த போது மயானத்திலே அடிகல் நாட்டினார் இந்த கோத்தாபய ராஜபக்ஸ. மைதானத்திலிருந்து மயானத்திற்கு போகமாட்டோம் என கூறிய மக்கள் அகதிகளாக இருந்த போது எங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக அமைச்சி பதவியை ஏற்ற எமது தலைவர் பழனிதிகாம்பரம் அவர்கள் தான் அந்த மக்களுக்கு வீடமைப்பு திட்டத்தினை அமைத்து கொடுத்தார்
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சி இல்லாமல் ஆக்கபட்டபோது மீண்டும் நாங்கள் அந்த அமைச்சை உறுவாக்கினோம், பொது தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வந்தோம், ஜம்பது ருபாய் அவிசாவலையில் வருவதாகவும் கித்துள்கலையில் வருவதாகவும் கூறுகிறார்கள் ,அது இடையில் வந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் ஜம்பது ருபா வந்து சேர்வதற்கு முன்பதாக தீபாவளி முற்பணமாக 5000ருபாய் பெற்று கொடுக்க அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்ததை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள் ஐம்பது ருபாவை வைத்து கொண்டு தாங்கள் அரசியல் செய்ய வேண்டாம் என குறிப்பிட்டார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -