காத்தான்குடி ஜாமிஅதுல் ஜமாலிய்யா அரபுக் கலாபீட மாணவர்களுக்கான விஷேட சுய கற்றல் வகுப்பு ஆரம்ப நிகழ்வு திங்கட்கிழமை (21) கலாபீடத்தின் கெளரவ பணிப்பாளர் மெளலவி எஸ்.எச்.எம்.றமீஸ் (ஹாபிழ்,ஜமாலி) தலைமையில் ஜாமிஅதுல் ஜமாலிய்யா அரபு கலாபீடத்தில் இடம்பெற்றது.
1827 ஆம் வருடத்தில் மத்ரஸதுல் ஜமாலிய்யா என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு 1989இல் ஜாமிஅதுல் ஜமாலிய்யா அரபுக்கலாபீடமாக தர உயர்வு பெற்றது.
பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் அவர்கள் பாடசாலையில் கற்றுக்கொண்டிருக்கும் காலத்திலேயே மார்க்க கல்வியை கற்றுவிளங்கி அதனடிப்படையில் தமது வாழ்க்கை, தொழில் ஏனையவைகள் அனைத்தையும் அமைத்துக் கொள்வதுடன் தனது பெற்றோரின் மரணத்திற்குப் பின் து ஆ செய்யக் கூடிய பிள்ளைகளாகவும்,முழு உலகிழும் சென்று தீனை பரப்பக் கூடியவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்ற நோர்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் கலாபீடதில் இதுவரையில் பல மாணவர்கள் ஆலிம்களாக கற்று வெளியாகி இன்று பல்துறை சார்ந்த பதவி நிலைகளில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
எதிர்கால மாணவர் சமூகத்தை சிறந்த நல்லொழுக்கம் மிக்கவர்களாகவும், நாட்டிற்கு பணியாற்றக் கூடிய நற் பிரஜைகளாக பயிற்றுவிக்கும் நோக்கில் மார்க்க வகுப்புக்களின் பின்னர் பாடசாலை கல்வியை கற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தும் நோக்கில் இச் சுய கற்றல் வகுப்பு ஆரம்ப்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேசக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விஷேட சுய கற்றல் வகுப்பை ஆரம்பித்து வைத்ததுடன் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். முன்மாதிரி மிக்க இந் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.சீ.எம்.ஏ. சத்தார் மற்றும் பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கலாபீட விரிவுரையாளர்கள் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.