நோர்வூட் ஜயரபி பகுதியில் லொறி ஒன்றில் பாடசாலை மாணவன் மோதுண்டு விபத்து...


மாணவன் மோதுண்ட காட்சி சீ. சீ. டிவி கேமராவில் பதிவு.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் ஜயரபி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் லொறி ஒன்றில் மோதுண்டு காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்க
பட்டுள்ள தாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 12.09.2019.வியாழகிழமை பிற்பகல் வேலையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர் இதே வேலை குறித்த பாடசாலை மாணவன் லொறியில் மோதுண்டும் காட்சி அருகாமையில் பொருத்தபட்டிருந்த சீ. சீ. டிவி கேமராவில்
பதிவாகியிருந்தமை குறிப்பிடதக்கது.
பலாங்கொடை பகுதியில் இருந்து அட்டன் பகுதிக்கு பொதிகளை ஏற்றிவந்த லொறிவண்டி மீண்டும் அட்டனில் இருந்து பலாங்கொட பகுதியை நோக்கி சென்ற வேலை நோர்வூட் ஜயரபி பகுதியில் உள்ள மஞ்சல் கடவையை குறித்த மாணவன் கடக்க முயன்ற போதே லொறியில் மோதுண்டுள்ள தாகவும் அதிக வேகம் காரனமாகவே
இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் சாரதி நோர்வூட் பொலிஸாரினால் கைது செய்யபட்டு
13.09.2019.அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -