கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கலாசார பணிப்பாளராக நவநீதன் பதவியேறபு !


காரைதீவு நிருபர் சகா-கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கலாசார பணிப்பாளராக துறைநீலாவணையைச்சேர்ந்த சரவணமுத்து நவநீதன் இன்று
(4) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக கடமையேற்றுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் சான் விஜயலால் டி சில்வா இந்த நியமனத்தை செய்துள்ளார்.
ஏலவே கிழக்கு மாகாண கலாசாரப்பணிப்பாளராகவிருந்த திருமதி ரவீந்திரன் கிழக்குமாகாண கல்வித்திணைக்களத்தில் மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளராக பணியாற்றிவந்த மட்டக்களப்பைச் சேர்ந்த சரவணமுத்து நவநீதன் (முன்னாள் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர்)
தற்போது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கலாசார பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.
இலங்கை நிருவாக சேவை அதிகாரியான ச.நவநீதன் மட்டு.சிவானந்தா வித்தியாலய பழையமாணவனாவார்.கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளராக கடந்த ஒருவருடகாலமாக கடமையாற்றிவந்தவேளை இந்தப்பதவிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
மிக முக்கியமான ஒரு திணைக்களத்தின் பணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் ச.நவநீதன் ஒரு கலை இலக்கிய ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -