நிந்தவூர் கமு/அல்- மஸ்ஹர் பெண்கள் கல்லூரியில் ஸ்மார்ட் கணனி நிலையம் திறந்து வைக்கப்பட்டது !!

நூருல் ஹுதா உமர்-
டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சினால் நாடு முழுவதிலும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நவீன கல்விக்கு மாணவர்களை தயார்படுத்தும் ஸ்மார்ட் கணனி நிலையம் இன்று காலை நிந்தவூர் கமு/அல்- மஸ்ஹர் பெண்கள் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது.
நிந்தவூர் கமு/அல்- மஸ்ஹர் பெண்கள் கல்லூரி அதிபர் எ.எல்.நிசாமுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான யு.கே ஆதம்லெப்பை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் அப்துல் றஹீம், ஐக்கிய தேசியக் கட்சியின் நிந்தவூர் பிரதேச இணைப்பாளர் எம்.றிபா உட்பட கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இங்கு அதிதிகளினால் ஸ்மார்ட் கணனி நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன் ஆசிரியர்களினால் விளக்கவுரையும் இடம்பெற்றது.
இச்செயல்திட்டத்தில் அம்பாரை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு பாடசாலை நிந்தவூர் கமு/அல்- மஸ்ஹர் பெண்கள் கல்லூரி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -