தோட்டத்தொழிலாளர்களுக்கு யார் மாதச்சம்பளத்தினை பெற்றுகொடுக்க முன்வருகின்றார்களோ அவர்களுக்கே ஜனாதிபதி தேர்தலில் பூரண ஆதரவு.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

காலம் காலமாக தேர்தல் காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தோட்டத்தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். 

ஆனால் இம்முறை தோட்டத்தொழிலாளர்கள் ஏமாறப் போவதில்லை ஆகவே இந்த ஜனாதிபதி தேர்தலில் தோட்டத்தெரிலாளர்களுக்கு மாதச் சம்பளத்த்னையும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு ,காணியுரிமை,வீட்டுரிமை,தோட்டங்களை துண்டாடுவதை தவிர்த்தல் போன்ற விடயங்களுக்கு எழுத்து மூலம் எவர் நிறைவேற்ற முன்வருகிறார்களோ அவர்களுக்கே இந்த ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் வேலை செய்யப்போவதாக அருணலு மகக்கள் முன்னணியின் தலைவர் வைத்தியர் கே.ஆர் கிசான் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக அருணலு மக்கள் மன்னணியின் விசேட கூட்டம் ஒன்று இன்று 31 திகதி மாலை ஹட்டன் நகர சபை மண்டபத்தில நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோட்டத் தெரிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்ததற்கமைய தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை மலையக மக்கள் பெற்றுக்கொடுத்தார்கள்.

ஆனால் எவரும் இன்று வரை அந்த வாக்குறுதியினை நிறைவேற்றவி;ல்லை. பிரதமர் ஆயிம் ரூபா பெற்றுத் தருவதாக தெரிவித்தார். ஆனால் அவரும் அதனை செய்ய வில்லை காலம் காலமாக தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றியிருக்கின்றார்களே தவிர எவரும் எதனையும் செய்யவில்லை.

ஆகவே தோட்டத்தொழிலாளர்களின் மாதச் சம்பளம் தொடர்பாக ஜெனிவா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.ஆகவே ஜனாதிபதி வேட்பாளர்களில் தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் பெற்றுக்கொடுக்க முன் வந்தால் நாங்கள் ஜெனவாவில் முன் வைத்துள்ள மனுவினை வாபஸ் வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம.; ஆனால் அதனை எழுத்து மூலம் தர வேண்டும் எமது கட்சிக்கு வழங்க வேண்:டும.; இம்முறை கணிசமான எண்ணிக்கையானோர் எம்முடன் உள்ளனர். 

அவர்கள் நாடு முழுவதும் பரவிரிந்து இருக்கின்றனர். அவர்கள் அனைவரினதும் வாக்குகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் நாடு முழுவதும் ஜனாதிபதியின் வெற்றிக்காக செயப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -