எம்.என்.எம்.அப்ராஸ்-
உலக வாய்ப்புற்று நோய் தினத்தை முன்னிட்டு இது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று கல்முனையில் இன்று (30) இடம்பெற்றது .
கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை மற்றும் வாய்சுகாதார பிரிவு ,தொற்றா நோய்பிரிவு என்பன இணைந்து ஏற்ப்பாடு செய்யப்பட்ட இவ் விழிப்புணர்வு ஊர்வல பேரணியானது
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.
இப் விழிப்புணர்வு நடவடிக்கையின் போது
சுகாதார பணிமனையின் வைத்தியர்கள் , ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இவ் விழிப்புணர்வு ஊர்வலமானது கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை முனன்றில் ஆரம்பித்தது பின்னர் பொலிஸ் வீதியினுடாகச் சென்று கல்முனை பொது சந்தையை ஊடாக பொது பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் ஆரம்ப இடத்தை வந்தடைந்தது.
இதன் போது மக்களுக்கு வாய்ப்புற்று நோய் தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் பஸ்கள், முச்சக்கர வண்டிகள்,பொது மக்கள் ஒன்றுகூடும் இடங்கள் என்பவற்றில் இது இது தொடர்பான ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டன.
குறிப்பாக வாய்ப்புற்றுநோயானது வெற்றிலை, புகைத்தல், மதுபானம் அருந்துதல் போன்ற காரணங்களால் இவ் நோய் தாக்கம் ஏற்ப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வாய்ப்புற்றுநோயானது வெற்றிலை, புகைத்தல், மதுபானம் அருந்துதல் போன்ற காரணங்களால் இவ் நோய் தாக்கம் ஏற்ப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

