ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்
பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் நான் பங்குபற்றக் கூடாது என ஜனாதிபதி தெரிவித்ததாக எனக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவித்ததை அடுத்து நான் பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. என்மீது இருந்த அவநம்பிக்கை இதற்கு காரணமாக இருக்கும். ஆனால் இறுதியாக ஒரு பாதுகப்புக் கூட்டத்தில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் அரச புலனாய்வு அதிகாரி நிஷாந்த டி சில்வா விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். அவர் அந்த விசாரணைகளை நிறுத்த வேண்டும் எனவும் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் ஜனாதிபதியும் தெரிவித்தனர்.
எனினும் எனக்கு இதில் உடன்பாடு இருக்கவில்லை. பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் இது குறித்து நான் காரணிகளை எழுப்பினேன். எனினும் என்னை கடமையை செய்ய பணித்தனர்.
எனவே கட்டாயத்தின் பெயரில் நான் அதற்கு இணங்கினேன். பின்னர் அது நடக்கவில்லை. ஆனால் நான் பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள கூடாது என்ற காரணி இதன் பின்னரே எழுந்தது. ஜனாதிபதியே என்னை பாதுகாப்பு குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என பணித்தார் என அவர் சாட்சியமளித்தார்.வீகே