குருக்கள்மடத்தில் உதவித்தாதியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா




வி.ரி.சகாதேவராஜா-

ம்பாறை மாவட்ட விபுலாநந்த புனர்வாழ்வு அமைப்பின் (ADVRO) அனுசரணையில் நடாத்தப்படும் உதவித்தாதிய பயிற்சிநெறியை பூர்த்தி செய்த மூன்றாவது தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நேற்று 28.07.2025 திங்கட்கிழமை மட். குருக்கள்மடத்தில் நடைபெற்றது .

குருக்கள்மடம் விபுலாநந்த முதியோர் பராமரிப்பு நிலைய மண்டபத்தில் அமைப்பின் தலைவர் டாக்டர் தியாகராஜா பெரியசாமி (தலைவர் ADVRO -UK) தலைமையில் இவ் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் இரா. முரளீஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஏனைய அதிதிகளாக மருத்துவர்களான திருமதி பு.லோகநாதன் , வா.ஞானரெட்ணம் ,வீ.அற்புதன்) , மற்றும் சா.அருள்மொழி ( மா.ச.சே உத்தியோகத்தர்) , எந்திரி த.மயூரன் எந்திரி தே.சர்வானந்தன்,க, அழகரெட்ணம் ( போதனாசிரியர் உ.தா.உத்தியோகத்தர்) உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்விலே உதவி தாதிப் பயிற்சியை நிறைவு செய்த மூன்றாவது தொகுதி மாணவர்கள் 16 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :