"பூவெலிகடை, அன்றும் - இன்றும்” : வரலாற்று நூல் வெளியீட்டு விழா



நுஸ்கி முக்தார்-
டுநுவரை பூவெலிகடை எம்.எல்.எம். அன்ஸார் எழுதிய "பூவெலிகடை, அன்றும் - இன்றும்” வரலாற்று நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு அல்-மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வெலம்பொட உதயகந்த தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் எஸ்.யு.எம்.எப். உடையார் கலந்துகொள்ளவுள்ளதுடன் பிரதம பேச்சாளராக விரிவுரையாளரும் பயிற்றுவிப்பாளருமான ஆஷிக் நியாஸ் பங்குபற்றவுள்ளார்.

இந்நூலில் உடுநுவரையில் தேயிலை வியாபாரம், புறக்கோட்டை தேயிலை ஏல விற்பனை, 1950-1960 களில் உடுநுவரையில் தேயிலை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தோர் விபரம் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வைபவத்தில் சகலரும் பங்குபற்றி சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -