அ.இ.ம. காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் ஏற்பாட்டினால் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கிவைப்பு.


கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டின் மூலம் தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் 2017ம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டில் விசேட முயற்சியான்மை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு சுயதொழிலில் ஈடுபடும் வருமானம் குறைந்த சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(27) காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அ.இ.ம. காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ எம். ஜலீல், பிரதேச சபை உறுப்பினர் கௌரவ எ.ஆர்.எம் பஸ்மீர், மாவடிப்பள்ளி மத்திய குழுத் தலைவர் எம். றஸாக்(ஜெமீல்), செயலாளர் கே. இம்தியாஸ்,பிரதேச செயலக கணக்காளர் செல்வி.என்.ஜயசர்மிகா அவர்களும், அபிவிருத்தி இணைப்பாளர் ஜனாப்.ஐ.எல்.எம்.ராபிஊ அவர்களும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்கள்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -