கிண்ணியா அல்மினா பாடசாலைக்கான புதிய இரு மாடிக் கட்டிடம் பிரதியமைச்சரால் திறந்து வைப்பு


ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட தி/கிண்/ அல்மினா மகாவித்தியாலயத்துக்கான புதிய இரு மாடிக் கட்டிடத்தை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் இன்று (27) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

பாடசாலை அதிபர் ஏ.சீ.எம்.சுபைர் தலைமையில் நடைபெற்ற குறித்த கட்டிடம் பிரதியமைச்சரினால் திறந்து மாணவர்களின் பாவனைக்கு விடப்பட்டது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் PSD திட்டத்தின் கீழ் உள்ள நிதி ஒதுக்கீட்டில் சுமார் 95 இலட்சம் ரூபா செலவில் பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் குறித்த கட்டிடம் அமைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன்பாவா, இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -