நியமனத்திற்றான பெயர்பட்டியல் வெளியிடப்பட்டு 6 மாதங்களை கடந்தும் நியமனத்தை வழங்காது அரசாங்கம் இழுத்தடிப்பு செய்திருக்கிறது.இதனால் 3850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே தொழில் செய்தவர்கள் கூட இந் நியமனத்தை நம்பி தங்கள் வேலைகளையும் இழந்துள்ளனர்.
இழுபறியில் உள்ள நியமனத்தை வழங்க வேண்டுமென கோரி இன்று(2018/12/04)ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கவயீர்ப்பு போராட்டம் ஒன்றை அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டோர் கலந்து கொண்டு நியமனத்தை விரைவாக ஜனாதிபதி வழங்க வேண்டுமென கோஷம் எழுப்பினார்கள்.
தெரிவு செய்யப்பட்டோரின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி செயலாளர் அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடி குறித்த நியமனத்தை வழங்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக கூறி உறுதி மொழி கடிதம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.
குறித்த நியமனத்தை நம்பி தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் நாளாந்தம் மன உளைச்சலுக்கு ஆளவதாகவும்,இனியும் ஏமாற்ற வேண்டாம் எனவும் கோஷங்களை எழுப்பினார்கள்.