ஜனாதிபதி செயலாளர் உறுதிமொழி கடிதம் வழங்கினார்

டந்த ஆண்டு(2017)கல்வியமைச்சினால் அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை சேவைக்கு அமர்த்த விண்ணப்பம் கோரப்பட்டு அதன்பின்னர் நேர்முகத் தெரிவு மற்றும் உடற்தகமை தெரிவு என்பனவும் நடைபெற்றது.3850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பவே கல்வியமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுட்டது.நேர்முக மற்றும் உடற்தகமை அடிப்படையில் 3850 பேர் தெரிவு செய்யப்பட்டு நியமனத்திற்கான பெயர்பட்டியல் இவ்வருடம் ஜூலை மாதமளவில் மாகாண ரீதியாக வெளிடப்பட்டது.

நியமனத்திற்றான பெயர்பட்டியல் வெளியிடப்பட்டு 6 மாதங்களை கடந்தும் நியமனத்தை வழங்காது அரசாங்கம் இழுத்தடிப்பு செய்திருக்கிறது.இதனால் 3850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே தொழில் செய்தவர்கள் கூட இந் நியமனத்தை நம்பி தங்கள் வேலைகளையும் இழந்துள்ளனர்.

இழுபறியில் உள்ள நியமனத்தை வழங்க வேண்டுமென கோரி இன்று(2018/12/04)ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கவயீர்ப்பு போராட்டம் ஒன்றை அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டோர் கலந்து கொண்டு நியமனத்தை விரைவாக ஜனாதிபதி வழங்க வேண்டுமென கோஷம் எழுப்பினார்கள்.

தெரிவு செய்யப்பட்டோரின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி செயலாளர் அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடி குறித்த நியமனத்தை வழங்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாக கூறி உறுதி மொழி கடிதம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.

குறித்த நியமனத்தை நம்பி தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் நாளாந்தம் மன உளைச்சலுக்கு ஆளவதாகவும்,இனியும் ஏமாற்ற வேண்டாம் எனவும் கோஷங்களை எழுப்பினார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -