கல்முனை சின்னத்தம்பி வீதி கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கொங்ரீட் வீதியாக புனரமைக்கப்படும் வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (2) ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
முன்னாள் பிரதி அமைச்சரின் இவ்விஜயத்தின்போது பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அரசியல் நெருக்கடி நிலமை உள்ள போதிலும் மாற்று உபாயங்களை பயன்படுத்தி உத்தேசிக்கப்பட்ட துரத்திற்கு மேலதிகமாக குறித்த வீதியினை முழுமையாக புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பணிப்புரையினை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இதன்போது விடுத்தார்.
இதன்போது கல்முனை மாநகர சபை தேர்ததலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 12ம் வட்டாரத்தில் போட்டியிட்ட எம்.எஸ்.எம். பலீல் உள்ளிட்ட பிரதேசவாசிகள் பிரசன்னமாகியிருந்தனர்.