இதேவேளை, பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க தனக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் முகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தாக்கல்செய்த விசேட மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாகவும் அவர்கள் தமது அதிகாரங்களை செலுத்த முடியதெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தாக்கல்செய்த விசேட மேன்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.வீரகேசரி