மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தோல்வி..!

ஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் ஏகமனதாக மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க தனக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் முகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தாக்கல்செய்த விசேட மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்படுவதாகவும் அவர்கள் தமது அதிகாரங்களை செலுத்த முடியதெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தாக்கல்செய்த விசேட மேன்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.வீரகேசரி

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -