மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை நாளை இராஜினாமா செய்கிறார் என்பதை, அவரது புதல்வர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் உறுதிசெய்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் மஹிந்த தரப்பால் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டிலும் பாதகமான தீர்ப்பு வெளியானதையடுத்து, வேறு தெரிவுகள் இன்றி பிரதமர் பதவியை துறக்க அவர் முடிவு செய்துள்ளார்.
இன்றையதினம் அவர் பதவியை துறப்பார் என முன்னரேயே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை பதவியை துறப்பதாக சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக நாமல் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
மஹிந்தவின் பதவிவிலகல் கடிதம் இன்று மதியமே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாக முன்னதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -