ஜனாதிபதி வீடு நோக்கி செல்ல நேரிடும் - ஜே.வி.பி


க.கிஷாந்தன்-
தோட்ட தொழிலாளர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தினால் தேயிலையின் ஏற்றுமதி பாரியளவில் பாதிக்கப்படும். அதேநேரத்தில் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் பொழுது ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும். இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என ஜே.வி.பியின் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

குறத்த சங்கத்தின் அட்டன் பிரதான காரியாலயத்தில் 11.12.2018 அன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,அரசாங்கம் ஒன்று நாட்டில் இல்லாத நிலையில் நாட்டின் அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பு கூறவேண்டிய கடமை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடமே காணப்படுகின்றது.
அந்தவகையில் ஆயிரம் ரூபாவை நாளொன்றுக்கான அடிப்படை சம்பளமாக கோரி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களிலும், பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளுக்கும் பொறுப்பு கூறவேண்டிய கடமை ஜனாதிபதியை சார்ந்ததாகும். ஜனாதிபதி தலையிட்டு தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவேண்டும்.
இல்லையேல் இன்று தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் 70 வீத போராட்டம் எதிர்காலத்தில் நூறு வீதமாகி தேசிய ரீதியிலான போராட்டமாக வெடிக்கும். அதன்போது ஜனாதிபதி வீடு நோக்கி செல்லவும் நேரிடும்.

கடந்த 4ம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் ஒக்டோபர் மாதம் 15ம் திகதியுடன் முடிவடைந்து புதிய ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் பேச்சுவார்த்தைகள் இன்று டிசம்பர் மாதம் நடுபகுதியை எட்டியுள்ள போதிலும் முறையான ஒரு தீர்வு எட்டப்படவில்லை.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம், அரச தரப்பு இந்த விடயத்தில் ஒரு சரியான தீர்வை கண்டிருந்தால் இன்று பணிபகிஷ்கரிப்பில் தொழிலாளர்கள் ஈடுப்பட தேவையில்லை.
ஆயிரம் ரூபாவை நாளொன்றுக்கான அடிப்படை சம்பளமாக கோரிக்கையாக முன்வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் இன்று பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் அரசு ஒன்று இல்லாத நிலையில் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் ஜனாதிபதி தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்திலும் தன்னிச்சையான முடிவை எடுக்க வேண்டும். ஜனாதிபதியால் அரசாங்கம் ஒன்றை உருவாக்கவும் அமைச்சர்கள் மற்றும் அமைச்சு அந்தஸ்துள்ள அமைச்சர்களை நிறுவ முடியும் என்றால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலும் தலையிட்டு மக்களின் கோரிக்கையான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இன்று தேயிலை ஏற்றுமதி பாரியளவில் பின்நோக்கிவுள்ளது. இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர் ஜனாதிபதி ஆவார். தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்படும் பொழுது பொருளாதாரத்தில் மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

70 வீத போராட்டமாக முன்னெடுக்கப்படும் இந்தநிலையில் 100 வீத போராட்டமாக பாரிமாணம் அடைவதற்கு முன்பு தொழிலாளர்களின் சமபளத்தை அதிகரிக்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -