நீர் வீண் விரயமாவதைக் கட்டுப்படுத்துமாறு வேண்டுகோள்


மினுவாங்கொடை நிருபர்-

நீர் வீண் விரயமாவதைக் கட்டுப்படுத்தும் பட்சத்தில், நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என, கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வினூடாக இந்த விடயம் கண்டறியப்பட்டதாக, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நீர் பயன்பாடு முறையாகப் பதிவு செய்யப்படாமையே, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு நட்டம் ஏற்படுவதற்கான காரணம் என்றும், இதன்போது கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல் மாகாணத்திலும் நீரின் பயன்பாடு குறித்து முறையாகப் பதிவாகுவதில்லை என, தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விடயம் குறித்து, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்ட விளக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும், கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் ஏற்படும் நீர் விரயம் கட்டுப்படுத்தப்படுமாயின், 1,200 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என, கணக்காய்வாளர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படாது எனவும், கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -