ஏ.எம்.ரிகாஸ்-
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் எஸ்எம்எம்எஸ். உமர் மௌலானா வெள்ளிக்கிழமை தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவரை வலயக் கல்வியலுவலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் புதிய பணிப்பாளரை மலை அணிவித்து வரவேற்றனர்.
இந்த நியமனம் கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில் நுட்பக்கல்வி, முன்பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்ச்pன் செயலாளர் ஐஜிகே. முத்து பண்டாவினால் வழங்கப்பட்டுள்ளது.
மருதமுனையைச் சேர்ந்த டாக்டர் உமர் மௌலானா மருதமுனை மத்த்;pய கல்லூரியின் அதிபராகவும் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அண்மைக்காலமாக கல்முனை வலயக்கல்வியலுவலகத்தில் நிருவாகம் மற்றும் முகாமைத்துவப் பிரிவிற்குப்பொறுப்பாக கடமையாற்றிக்கொண்டிருந்தபோதே மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.