எம்.எம்.ஜபீர்-
சம்மாந்துறை பிரதேச செயலகமும் சம்மாந்துறை பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி செயலமர்வு தாருள் ஹசனாத் கலா பீடத்தில் நேற்று இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச அனர்த்த முகாமைத்துவ குழுவின் தலைவர் மௌலவி ஏ.ஆர்.எம்.இர்பான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்; எம்.எம். ஆசிக், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.பெரோஸ், சம்மாந்துறை பிரதேச சமூக சேவைகள் சம்மேளனத்தின் தலைவர்; காமில் இம்டாட், குழுக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அனர்த்த முன்னாயத்தம், முன்னெச்சரிக்கை நிவாரணம் வழங்கள், மக்களுக்கான விழிப்புணர்வு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் செயல்முறை ஒத்திகை பயிற்சியும் வழங்கப்பட்டது.