பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் குறைந்தும் பஸ், ஆட்டோவின் கட்டணம் குறையவில்லை பயணிகள் விசனம்!

எம்.எஸ்.எம். ஸாகிர்-

ரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டு, பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும் பஸ், ஆட்டோ ஆகியவற்றுக்கு அறவிடப்படும் கட்டணம் இன்னும் குறைக்கப்படவில்லை என பயணிகளான பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எரிபொருட்களின் விலைகள் 2 தடவைகள் குறைக்கப்பட்டிருந்தும் ஏன் இவ்வாறு அதிக கட்டணங்களை அறவிடுகின்றனர் எனவும் கட்டணங்களை கூட்டுவதில் எடுக்கும் ஆர்வம் ஏன் விலை குறைக்கப்படும் போது அமுலுக்கு கொண்டு வருவதில் தாமதத்தைக் கையாளுகின்றனர் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

இவ்விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் பாரா முகமாக இருப்பது பற்றியும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பஸ் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள், நடத்துனர்கள், சாரதிகள், கட்டணங்கள் அதிகரிக்கப்படும் அறிவித்தல் வந்தவுடன் எடுக்கும் துரித நடவடிக்கைகளை, கட்டணங்கள் குறைக்கப்படும் போது கவனத்தில் கொள்வதில்லை எனவும் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,பொது மக்களின் நலன்கருதி, பாமர மக்களும் பயனடையும் வகையில் இதற்கான தீர்வைப் பெற்றுத் தருமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஜனாதிபதி, பிரதமர், மற்றும் போக்குவரத்து அமைச்சர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வேண்டுகோளை கவனத்தில் எடுப்பார்களா?

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -