உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தர் உருவாக்கிய மட்டக்களப்பு கல்லடி
சிவாநந்தா தேசிய பாடசாலை பழையமாணவர் சங்கத்தின் வைரவிழாவையொட்டிய சிநேகபூர்வ விளையாட்டுப் போட்டிகள் நாளை (24) சனிக்கிழமை கல்லடி சிவானந்தா மைதானத்தில் நடைபெறவிருக்கின்றன..
பொதுக் கூட்டத்தை சிறப்பிக்கும் வகையில் அமைந்த பாடசாலை மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்குமான சினேகபூர்வ முன்னோடி விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது.
காலை மு.ப 08.30 மணியளவில் கிரிக்கட் போட்டியும் பி.ப 04.30 மணியளவில் உதைபந்தாட்டப் போட்டியும் நடைபெறவிருக்கிறது.
மறுநாள் பழையமாணவர்சங்கத்தின் தலைவர் முருகேசு முருகவேல் தலைமையில்
நடைபெறவிருக்கும் 60வது வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் வைரவிழா
நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.
இராமகிருஸ்ணமிசன் மட்டு.மாநில முதல்வர் ஸ்ரீமத் சுவாமி தக்ஸயானந்தா
ஜீயின் ஆசியுடன் அன்றைய நிகழ்வுகள் யாவும் நடைபெறவுள்ளன.
காலை 8மணிக்கு கல்லடி இ.கி.மிசன் ஆச்சிரமத்தில் விசேட பூஜை நிகழ்வுகள்
இடம்பெறும். தொடர்ந்து சிவாநந்தா வித்தியாலய சுவாமி நடராஜாநந்தா
மண்டபத்தில் வைரவிழா நிகழ்வுகள் நடைபெறும்.
அங்கு வைரவிழா சிறப்பு நிகழ்வுகள் நடைபெறக் காத்திருக்கின்றன.
சிவாநந்தா வித்தியாலயம் 90வது வருடத்தை அடைகின்ற அதேவேளை அதன்
பழையமாணவர்சங்கம் 60வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது என்பது
முக்கியமானதொன்று. எனவே இந்த வைரவிழாவிழாவிலும் பொதுக்கூட்டத்திலும்
அனைத்து பழையமாணவர்களையும் அன்புடனும் வாஞ்சையுடனும் அழைப்பதாக
பழையமாணவர் சங்கச்செயலாளார் கலாநிதி.வி.பிரதீபன் தெரிவித்தார்.