1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி கிழக்கு மாகாணத்தை உலுக்கிய அகோர சூறாவளிக்கு இன்று(23) வெள்ளிக்கிழமை நாற்பது(40) வயதாகின்றது.
கிழக்கில் திருகோணமலை தொடக்கம் அம்பாறை மாவட்டம் ஈறான கரைப்பிரதேசங்களை அச்சூறாவளி புரட்டி எடுத்தது.
1978.11.23ஆம் திகதிமாலை 6.30மணிமுதல் மறுநாள் 24ஆம் திகதி அதிகாலை 4.30மணிவரை சூறாவளி அகோரமாக கிழக்கை சின்னாபின்னமாக்கியது.
இன்றைய இளம்சந்ததியினருக்கு இச்சூறாவளி பற்றி தெரிந்திருக்காது.
அச்சூறாவளியினால் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மரணமானார்கள்.பத்து லட்சத்துக்கு மேற்பட்டேர் பாதிப்புக்குள்ளாகினர்.இரண்டரை லட்சம் வீடுகள் பாதிப்புக்குள்ளாகின.28ஆயிரம் தென்னைகள் அடியோடு புடுங்கிவீசப்பட்டன.11அரிசிஆலைகள் முற்றாக சேதமாக்கப்பட்டன.
இவற்றை ஈடுசெய்ய அன்றைய அரசுக்கு 60கோடி ருபா தேவைப்பட்டது.
சூறாவளியின் 40ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்று கிழக்கெங்கும் பரவலாக நினைவுகூரப்படுகின்றது.