நியூயோர்க் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி கையாண்ட அணுகுமுறையைப் பாராட்டுகின்றேன்


- அமைச்சர் பைஸர் முஸ்தபா புகழாரம்- 

மினுவாங்கொடை நிருபர்-

நியூயார்க்கில், ஐக்கிய நாடுகள் பொது சபைக்கான 73ஆவது அமர்வின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த மூன்று வருடங்களில் இலங்கையை ஒரு மனிதாபிமானமிக்க சமுதாயமாக மாற்றுவதற்கு மேற்கொண்ட படிமுறைகளை சபை உறுப்பினர்களிடம் விளக்கிக் கூறினார். மேலும் அவர் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகத்திற்கு, பலஸ்தீன மக்களின் உரிமைகளை கையாள்வதில் இதேபோன்ற அணுகுமுறையை எடுக்குமாறும் வலியுறுத்தினார். மக்கள், ஊடகம் மற்றும் நீதித்துறை சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதில் இலங்கை மிக நீண்ட தூரம் பயணித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார். இலங்கை எப்பொழுதும் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தே வந்திருக்கின்றது, வருங்காலங்களில் பலஸ்தீன மக்களுக்கு தீர்வு காண்பதில் வினையூக்கியாக இருப்போம் என எமது தலைவர் உறுதியளித்தார். ஜனாதிபதி அவர்களின் தைரியமான சிந்தனையை பாராட்டுகின்றேன், தொடர்ந்தும் அவருடன் நெருக்கமாக பணியாற்றி பலஸ்தீன மக்களின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -