க‌லைஞ‌ர் க‌ருணாநிதிக்கு உல‌மா கட்சியின் இரங்கல்


க‌லைஞ‌ர் க‌ருணாநிதி. த‌மிழ் நாட்டின் முத‌ல‌மைச்ச‌ராக‌ ப‌ல‌ த‌ட‌வை இருந்தும் மிக‌ப்பெரிய‌ க‌ட்சியான‌ தி மு க‌ த‌லைவ‌ராக‌ இருந்தும் இறுதிவ‌ரை க‌லைஞ‌ர் என்றே அழைக்க‌ப்ப‌ட்ட‌தால் க‌லைஞ‌ர் க‌ருணாநிதியால் எழுத்துல‌க‌ம் பெருமை கொள்கிற‌து.

மு. க‌ருணாநிதி த‌ன‌து எழுத்துக்க‌ளால் த‌ன‌க்கென‌ இட‌ம் பிடித்து அத‌னை அர‌சிய‌லிலும் சாதித்து காட்டினார்.
ஒரு க‌விஞ‌னாக‌, எழுத்தாள‌னாக‌ இருந்த‌ போது அர‌சிய‌ல் சாக்க‌டை என‌ சொல்லிவிட்டு கும்ப‌லோடு கும்ப‌லாக‌ அவ‌ர் இருக்க‌வில்லை. மாறாக‌ த‌ன‌து புர‌ட்சிக் க‌ருத்துக்க‌ளை அர‌சிய‌ல் ம‌ய‌ப்ப‌டுத்தி ம‌க்க‌ள் ம‌ன‌தில் இட‌ம் பிடித்தார்.
க‌ட‌வுள் பெய‌ரால் ந‌ட‌க்கும் அநியாய‌ங்க‌ளையும் சாதிக்கொடுமைக‌ளையும் துணிச்ச‌லுட‌ன் சுட்டிக்காட்டினார். இப்போதெல்லாம் ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ள் இத்த‌கைய‌ கொடுமைக‌ளை எடுத்தெழுத‌ அச்ச‌ப்ப‌டும் போது ம‌த‌ம் என்ப‌து புனித‌ம் என‌ க‌ருத‌ப்ப‌ட்ட‌ அக்கால‌த்தில் அவ‌ரால் எழுத‌ப்ப‌ட்ட‌வை அபார‌மான‌வை.
பிழையான‌ ப‌ல‌ க‌ட‌வுட் கொள்கையையும், உய‌ர் ஜாதிக்க‌ளின் ம‌த‌ அடிப்ப‌டையிலான‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ளையும் க‌ண்டித்து எழுதிய‌ அவ‌ர் க‌ட‌வுளே இல்லை என‌ சொல்லும் அள‌வுற்கு ச‌மூக‌த்தில் இருந்த‌ கொடுமைக‌ளைக்க‌ண்டு க‌ல‌ங்கினார்.
ஓர் இல‌க்கிய‌வாதி த‌ன‌து க‌ருத்துக்க‌ளை ம‌க்க‌ள் ம‌ய‌ப்ப‌டுத்தி ம‌க்க‌ளை த‌ன் க‌ருத்தின்பால் ஒன்று சேர்க்க‌ வேண்டும் என்றால் நிச்ச‌ய‌ம் அர‌சிய‌ல் என்ற‌ வ‌ழி தேவை என்ப‌தை காட்டிய‌ க‌லைஞ‌ர் மு. க‌ருணாநிதியின் இழ‌ப்பில் உல‌மா க‌ட்சியும் த‌ன‌து க‌வ‌லையை தெரிவித்துக்கொள்கிற‌து.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தலைவர் உலமா கட்சி-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -