உளூக்காப்பள்ளம் பாடசாலை நிர்வாகத்தினரினதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கரம்பை வட்டார அமைப்பாளர் தன்வீர் அவர்களினதும் வேண்டுகோளிற்கிணங்க இன்று கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் அவர்கள் உளுக்காப்பள்ளம் பாடசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன் போது பாடசாலையில் காணப்படும் குறைப்பாடுகளை பாடசாலை நிர்வாகத்தினர் முன் வைத்தனர்.
அதில் விஷேடமாக பெண்களுக்கென்று ஓர் தனியான சிற்றூண்டிச்சாலை காணப்பட்டது, அதனை தனது சொந்த நிதியில் அமைத்து தருவதாகவும் , நாளைய தினமே அவ்வேளைகளை ஆரம்பிக்குமாறும் கூறினார்.
அத்தோடு தொடர்ந்து பாடசாலையில் நிலவிவரும் வகுப்பறைப்பற்றாக்குறைக்கான கட்டிடத்தீர்வு மற்றும் உள்ளகப்பாதை, மலசலக்கூடப்பிரச்சினை ஆகியவற்றை கரம்பை வட்டாரத்துக்கு பொறுப்பான அமைப்பாளர் தன்வீர் அவர்களுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்கள் ஊடாகப்பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -