கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக செய்தி


அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிக கல்வி பீடத்தின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல்!
திருகோணமலைவளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிககல்விபீடத்தின்;, 1 ஆம் வருட (இரண்டாம் அரையாண்டு) மாணவர்களுக்கானகற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியும் 3 ஆம் வருட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதியும் ஆரம்பிக்கபடவுள்ளது.
இத்தினங்களில் அக்கல்வியாண்டிற்கான மாணவர்கள் பெற்றோர்களுடன் சமுகமளிக்குமாறு வளாக முதல்வர் கலாநிதி வ. கனகசிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை வளாகத்தின் இப்பீடத்தின் கல்வி ஆண்டிற்கான மாணவர்களின் சகல கல்வி நடவடிக்கைகளும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் 4 ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் திகதியும், 2 ஆம் வருட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 14 ஆம் திகதியும் மீள ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -