ஓட்டமாவடி ECGO (எகே) கிண்ண சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டி

எம்.ரீ.எம்.பாரிஸ்-

ECGO கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று இடம்பெறவுள்ளது.கல்வி தொழில் வழிகாட்டல் அமைப்பின் (ECGO ) ஏற்பாட்டில்தொடர்ச்சியாக நான்காண்டுகளாக பாடசாலை மாணவர்களிடையேவிளையாட்டினூடாக நற்புறவை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்டுவரும் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் நான்காவது தொடரில்கலந்து கொண்டு இறுதிப்போட்டிக்கு தெரிவான ஓட்டமாவடி தேசியபாடசாலையின் 2019, 2020ம் ஆண்டுகளில் பரீட்சை எழுதவுள்ள உயர்தரமாணவர்களின் அணிகள் இக்கிரிகெட் சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டனர். நாணய சூழற்சி அடிப்படையில் 2020ஆண்டு அணியினர்களத்தடுப்பிற்கும் 2019ஆண்டு அணியினர் துடுப்பாட்டத்திற்கும் தெரிவுசெய்யப்பட்டனர்.

10 ஓவர் என்ற அடிப்படையில் இடம் பெற்ற இக்கிரிகெட்சுற்றுப்போட்டியில் 2019 ஆம் ஆண்டு அணியினர் ஒன்பது ஓவர்களில் 10விக்கெட்டுகளை இழந்து 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். 2020ஆண்டு அணியினர் 6.5 ஓவர்களில் தமது சிறந்த துடுப்பாட்டங்களின்மூலம் நான்கு விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களை பெற்று வெற்றியைதமதாக்கி கொண்டமை குறிப்பிடத்தக்கது. ECGO அமைப்பின் தலைவர்எம்.எம். நவாஸ் ஆசிரியர் தலைமையில் இடம் பெற்ற இக்கிரிகெட்இறுதிசுற்றுப்போட்டி நிகழ்வின் பிரதம அதிதியாக ஓட்டமாவடிகோட்டக்கல்விப்;பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரஹ்மான்,பாடசாலையின்பிரதி அதிபர் ஏ.எல்.எம். கபீர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலரும்; கலந்துகொண்டு வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

இங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைப்பின் தலைவர்எம்.எம்.நவாஸ் ஆசிரியர் கல்வி தொழில் வழிகாட்டல் அமைப்பானதுஇப்பிரதேச மாணவர்களின் கல்வி, தொழில் ரீதியான வழிகாட்டல்களைவழங்கி வருவதுடன், விளையாட்டினூடாகவும் இப்பிரதேசமாணவர்களிடையே பொறாமையற்ற போட்டித்தன்மை உருவாக்கி கல்விமற்றும் விளையாட்டுத்துறைகளிலும் சிறப்பான அடைவுகள்பெற்றுக்கொள்ளும் நோக்கில் ECGO கிண்ண கிரிக்கெட்சுற்றுப்போட்டியினை கடந்த நான்காண்டுகளாக தொடர்ச்சியாக நடாத்திவருவதாக குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -