முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பிரதேசமான அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம் மாணவர்களுக்கு 16.07.2018 அன்று ஒரு தொகை பாதணிகள் தமிழ்தாய் இளைஞர் கழகத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இப் பிரதேசத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களின் பிள்ளைகளது கல்வித்தரத்தினை உயர்த்தும் நோக்கத்துடன் வவுனியா தலைமையாக கொண்ட தமிழ்தாய் இளைஞர் கழகத்தினர் இந்த நன்கொடையினை 16.07.2018 மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
பொருளாதார சிரமங்களை எதிர்கொள்வோரை பாடசாலை அதிபரால் இனங்காணப்பட்டு 40 மாணவர்களுக்கு சுமார் 50.000 ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட பாதணிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இவ் நிகழ்வில் தமிழ்தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் வ.பிரதீபன், கழகத்தின் செயலாளரும் பாடசாலை ஆசிரியருமாகிய வி.அனோஜன், பாடசாலை அதிபர் அல்பிரட் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.