தமிழ்தாய் இளைஞர் கழகத்தால் முல்லை மாணவர்களுக்கு பாதணிகள் கையளிப்பு..!(படங்கள் இணைப்பு)

வரதராசா பிரதீபன்-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பிரதேசமான அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம் மாணவர்களுக்கு 16.07.2018 அன்று ஒரு தொகை பாதணிகள் தமிழ்தாய் இளைஞர் கழகத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இப் பிரதேசத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களின் பிள்ளைகளது கல்வித்தரத்தினை உயர்த்தும் நோக்கத்துடன் வவுனியா தலைமையாக கொண்ட தமிழ்தாய் இளைஞர் கழகத்தினர் இந்த நன்கொடையினை 16.07.2018 மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

பொருளாதார சிரமங்களை எதிர்கொள்வோரை பாடசாலை அதிபரால் இனங்காணப்பட்டு 40 மாணவர்களுக்கு சுமார் 50.000 ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட பாதணிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இவ் நிகழ்வில் தமிழ்தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் வ.பிரதீபன், கழகத்தின் செயலாளரும் பாடசாலை ஆசிரியருமாகிய வி.அனோஜன், பாடசாலை அதிபர் அல்பிரட் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -