இன்று மாபெரும் சித்தர் ரத பவனி ஊர்வலம் காரைதீவு - மண்டுர்!


காரைதீவு  சகா-
ன்னெடுங் காலமாக ஈழமணித் திருநாடெங்கும் நடமாடி பல சித்துக்கள் புரிந்து காரைதீவு பதியில் ஜீவ சமாதி அடைந்த சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசையை முன்னிட்டு நடைபெறும் வருடாந்த ரத பவனி ஊர்வலமானது 06.06.2018 இன்று வெள்ளிக் கிழமை காலை 6.00 மணிக்கு காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஜீவ சமாதி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

இவ் ஊர்வலமானது காரைதீவு கல்முனை நகர் உள் வீதிகளுடாகச் சென்று நற்பட்டிமுனை சேனைக்குடியிருப்பு கிட்டங்கி ஊடாக நாவிதன்வெளிஅன்னமலை வேப்பையடி மண்டூர் முருகன் ஆலயம் சென்று மீண்டும் வேப்பையடி நாவிதன்வெளி வீரமுனை சம்மாந்துறை பிரதான வீதியூடாக காரைதீவை வந்தடையும்.

சுமார் 25 உழவு இயந்திரங்களில் பக்தர்கள் அணிசேர சித்தரின் திருவுருவம் தாங்கிய ஊர்தி பின்னேவர இந்த ரதபவனி நகரவுள்ளதென ஆலய பரிபாலனசபைச்செயலாளர் த.தவகுமார் தெரிவித்தார்.
அதேவேளை ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 67வது குருபூஜை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்று கல்விச்சாதனையாளர்கள் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது.
முன்னதாக 19ஆம் திகதி முத்துச்சப்பரமும் 20ஆம் திகதி கோமாதாபூஜையுடனான விசேடயாகமும் திருவிளக்குப்பூஜையும் 21ஆம் திகதி கா லை பாற்குடவபனியும் தொடர்ந்து கௌரவிப்புநிகழ்வும் குருபூஜையும் இடம்பெறும். அன்றுமாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன என செயலாளர் த.தவகுமார் தெரிவித்தா ர்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -