புதிய கணினிக்கூடம் திறந்து வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் புதிய கணினிக்கூடத்திறப்பு விழாவும் இலத்திரனியல் பயிற்சி முகாமைத்துவத் தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வும், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில் கிழக்கு மாகாண முகாமைத்துவப் பயிற்சிப் பிரிவில் நேற்று வியாழக் கிழமை (05) நடைபெற்றது.

இப்புதிய கணினிக்கூடம், 50 பயிலுநர்கள் ஒரே தரத்தில் பயிற்சி பெறக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதோடு, உத்தியோகத்தர்கள் சகலரும் இப்பயிற்சிப் பிரிவுடன் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ளும் வகையில், பயிற்சி முகாமைத்துவத் தரவுத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் செல்வி எம்.எம். ஹாலிதா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -